பிறகு
தேடல் வழியில்
என் கனவினை
காண்பதற்கு
பிரபஞ்சம் தோன்றா
நிலையில்
அதன் வெற்றிடத்தில்
இல்லாமையின் இருப்பை
உணர்த்தி கொண்டிருக்கும்
சுய திறவுக்கோல்
இன்னுமும்
உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது .
நிறுத்தம்.
ஒரு இடைவெளியாக
என்னால் குறிக்கப்பட்டு
முடிவிலியாக
இன்று மாறும் வினையினை
பின்
எதிர்காலத்தின் ஒரு நிகழ்காலம்
தன் இயங்குதலை மேலும்
தொன்மையாகும் .
பிறகு
சொல்லப்பட்டவை
இன்னுமும்
முடிக்கப்படவில்லை .
நிகழ்வின் அதிர்வுகள்
உணர்த்துவதற்கு என்று
ஒரு பிரபஞ்ச இயக்கத்தை
நினைப்பதற்கு இந்த நொடியின்
பிறகு
அவை
என்னுடையதாக மாறும்
காலத்தில்
நான் இருக்கபோவதில்லை .
-வளத்தூர் தி.ராஜேஷ் .
Comments
Post a Comment