விருப்பங்கள்-திண்ணை.

இந்த வாரம் திண்ணையில்  வெளியான  கவிதை 


http://puthu.thinnai.com/?p=6906


என் கருதுகோள்கள் 
ஒவ்வொன்றாக 
உதிர தொடங்குகிறது 
பொய்மையின் உருவில் .

வழியெங்கும் அதன் 
பிம்பங்கள் என்னை 
துரத்துகிறது 
உண்மையின் 
சிந்தனையாய் .

குறிப்பிட்டு சொல்ல 
ஏதும் இல்லாமலே 
வார்த்தை இயலாமையில் 
உறைகிறது .

அவரவர் நியாயங்கள் 
பொய்மையும் 
உண்மையும் 
உருவில் 
அலைந்து 
கொண்டிருக்கிறது .

அவர்களுக்கு 
விருப்பமானவற்றை 
அணிகிறார்கள் 
நம்மையும் 
அணிவித்து 
விடுகிறார்கள் 
அவர்களின் 
வாயிலாகவே.
         -வளத்தூர் தி .ராஜேஷ் 
.
அன்பின் நன்றிகள் திண்ணை நண்பர்களுக்கு .


Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு