இரவின் எண்ண போர்வை
தொலைத்தூர இருண்மை பிடிக்க
என் நிழல் உண்டானதாக
பொய்மையை உரைத்தது
என் சுய ஒளி.
நம்புவதற்கு என்றே
இருக்கிறது என் சூழ்நிலையும்.
அந் நிழலை
ஒழிப்பது என்று
நேற்றைய இரவில்
முடிவு செய்தாகி விட்டது .
இப்பொழுதைய ஒரே ஒரு
ஆறுதல் அத்தகைய இரவு
வர வேண்டும் என்பதே .
நொடிகளை அலட்சியப்படுத்தி
சிதைத்து கொண்டிருக்கும்
மவுனமும் இரவை
நோக்குகிறது .
இதற்கும் தனிப்பட்ட பகை
இருக்க கூடும்
அவை
இரவினை கொடுர புன்னகையையுடன்
வரவேற்க காத்திருக்கிறது .
இரவின் மீதும் அதன் நிழல் மீதும்
கொண்டுள்ள எண்ண போர்வையை
பெரிதும் ஒன்றும் செய்ய இயலாது
ஆனால் அதனை இல்லாமல்
செய்து விட ஒரே வழி
இரவினை வராமல் செய்து விடுவது தான் .
அப்படிப்பட்ட இரவை இப்பொழுதே
பிரபஞ்சம் உருவாக்குகிறது
அதன் இயக்கத்தில்
இப்பொழுதைய உலகில்
தோன்றிய தோன்றுகின்ற
தோன்றும் அனைத்து இரவுகளும்
காலத்தினால் செய்யப்பட்ட
என் சுய ஒளியானது .
-வளத்தூர் தி.ராஜேஷ் .
Comments
Post a Comment