இரவின் எண்ண போர்வை

தொலைத்தூர இருண்மை பிடிக்க 
என் நிழல் உண்டானதாக 
பொய்மையை உரைத்தது 
என் சுய ஒளி.
நம்புவதற்கு என்றே 
இருக்கிறது என் சூழ்நிலையும்.
அந் நிழலை 
ஒழிப்பது  என்று 
நேற்றைய இரவில் 
முடிவு செய்தாகி விட்டது .
இப்பொழுதைய ஒரே ஒரு 
ஆறுதல் அத்தகைய இரவு 
வர வேண்டும் என்பதே .

நொடிகளை அலட்சியப்படுத்தி 
சிதைத்து கொண்டிருக்கும் 
மவுனமும் இரவை
நோக்குகிறது .
இதற்கும் தனிப்பட்ட பகை 
இருக்க கூடும் 
அவை 
இரவினை கொடுர புன்னகையையுடன் 
வரவேற்க காத்திருக்கிறது .

இரவின் மீதும் அதன் நிழல் மீதும் 
கொண்டுள்ள எண்ண போர்வையை 
பெரிதும் ஒன்றும் செய்ய இயலாது 
ஆனால் அதனை இல்லாமல் 
செய்து விட ஒரே வழி
இரவினை வராமல் செய்து விடுவது தான் .
அப்படிப்பட்ட இரவை இப்பொழுதே 
பிரபஞ்சம் உருவாக்குகிறது 
அதன் இயக்கத்தில் 
இப்பொழுதைய உலகில் 
தோன்றிய தோன்றுகின்ற 
தோன்றும் அனைத்து இரவுகளும் 
காலத்தினால் செய்யப்பட்ட 
என் சுய ஒளியானது .
                       -வளத்தூர் தி.ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு