படிமங்கள்-திண்ணை



இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை 

என் படிமங்கள்
ஒவ்வொன்றாக
அலங்கரிக்கப்படுகின்றன
அதன் கட்டமைப்பு
மிகவும் தொன்மையானவை
உலகில் தோன்றிய
முதல் உயிரின்
மிச்சங்கள் இதிலும்
இருக்கிறது .
படிமத்தின் அசைவுகளை
உன்னிப்பாக கவனிக்கிறேன்
அவையே என்னை
தீர்மானிக்கின்றன
எதை முன்னிலை
ஆக்குவது என்பதில்
பெரும் போட்டிகளும்
போராட்டங்களும்
நாளும் நடைபெறுகின்ற
இயல்பாகிறது .
புதிய படிமங்கள்
தோன்றுவதில்
பழையனவை
ஆதங்கம்
கொள்கின்றன
தான் இன்னும்
கீழே செல்கிறோம்
என்று
அவை இன்னும்
தொன்மையாகிறது
என்பதை அறியாமை
உடையவானகிறது .
நிறங்களின் தன்மையை
மேலும் கூட்டுகிறது
இதன் உருவங்கள்
பார்பதற்கு இன்னும்
நிகழ்வு நடைபெறவில்லை
அதனை நோக்கியே
முனைப்பும்
அடிகோலுகிறது .
-வளத்தூர் தி.ராஜேஷ் .
அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு