தம்பியின் பிறந்த நாளுக்கு ..
வீட்டின் நிறைவு கொண்ட
மகிழ்வின் பிறப்பிடம்
எங்கள் தம்பியிடம்
இருந்து பிறந்தது .
இன்று பிறந்த நாள்
காணும் என் அன்பு
தம்பிக்கு பிறந்த நாள்
வாழ்த்துகள் .
என் அண்ணனுக்கு
நான் மகிழ்வை
அளித்தேனோ இல்லையோ
தம்பி பாலாஜி
இரு அண்ணன்களுக்கும்
மகிழ்வை அளித்து கொண்டிருக்கிறான் .
எங்கள் வீட்டின்
மூன்றாம் குழந்தை
என் தம்பி
செல்லப்பிள்ளையாக
எப்பொழுதும் இருப்பவன் .
நினைவின் தொகுப்புகள்
அலசப்படுகிறது
அதில் தெரியும்
எண்ண அலைகள்
மகிழ்வின் மொத்த
இனிமையை சார்ந்தது .
வீட்டின் மொத்த
அதிகாரத்தை
இவன் குரலில்
இன்னுமும்
இசைத்து கொண்டிருக்கிறது
எங்கள் வீடு .
சில நிகழ்வை
அவன் நினைவில்
வைத்திருப்பனோ
இல்லையோ என்
அன்பின் வழியது
அந்நினைவுகள் .
மூன்று இல்லை நான்கு
வயதிருக்கும் கடைத்தெருவுக்கு
சென்று வரும் வழியில்
பால்க்காரன் ஒருவர்
தம்பியின் கால் மீது
சைக்கிளை ஏற்றிவிட்டான்
தம்பி மவுனமாகவே
இருந்தான் நானோ
அழுது புலம்பினேன் .
அப்பொழுது இருந்த
மளிகை கடைக்கு
அப்பா செல்லும் பொழுதெல்லாம்
கடை சாவியை தம்பியின்
கையில் கொடுத்த பிறகே
அதை வாங்கி செல்வார்
சில சமயத்தில் அண்ணனும் நானும்
இதற்காக சண்டையிட்டு கொள்வோம் .
அப்பா தினமும் தருகின்ற
முத்தமும் ,ஐந்து காசும் ,பத்து காசும்
கொண்டு
கிளிமூக்கு பாய் கடைக்கு
சென்று பொம்மை சாம்மான்
வாங்க மூவருமே
என்ன வாங்க வேண்டுமென
கடை வரை விவாதித்து கொண்டே
செல்லும் நினைவின் வழித்தடங்களை
இன்னும் அழியாமல்
பாதுகாக்கிறேன் .
இன்னும் என்னை
உறுத்திக்கொண்டிருக்கும்
எண்ணம்
என் அண்ணனுக்கு தம்பியாகவும்
தம்பிக்கு அண்ணனாகவும்
இதுவரையில் இருந்திருக்கவில்லை
என்பது தான் .
நம் குழந்தை பருவங்களின்
இனிமையான நிகழ்வுகள்
அனைத்துமே இன்றைய
வாழ்வில் மீண்டும்
நடக்க சாத்தியமில்லை தான்
நம் நினைவுகளே போதும்
அவ்வபொழுது சில
சாத்தியமாக்க .
உன் வரைமுறையில்
என்னை
உள்ளத்தில் எப்படி
அமைத்து கொண்டிருக்கிறாய்
என்று அறியாது இருக்கிறேன்
எப்படி இருந்தாலும் நான்
நம் சிறுவயதில் கொண்ட
ராஜேஷ் ஆக இருப்பதாகவே
உணர்கிறேன் .
என் கோபமும் கண்ணீரும்
வதம் கொண்ட சொற்கள்
அனைத்துமே தாங்கி கொண்டு
இருக்கிறாய் என் தவறின்
மன்னிப்பை சிறிது சிறிதாக
என் அன்பினால் வழங்கி
கொண்டிருக்கிறேன்
ஏற்றுக்கொள்வதும் ,மறுப்பதும்
உன் விருப்பம் சார்ந்தது டா .
எப்பொழுதும் அகமகிழ்வாய் திகழ
நம் ஆயாவின் ஆசியும், வாழ்த்துகளும்
கொண்டு சிறப்பாக வாழ வாழ்த்தும்
உன் அண்ணன் தி .ராஜேஷ் .
வளத்தூர் தி.ராஜேஷ்
Comments
Post a Comment