ராஜேஷ் கவிதைகள்.

இந்த வாரம் உயிரோசையில் வெளியாகும் எனது மூன்றாவது  விதை 

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4743


வளத்தூர் தி.ராஜேஷ்

முன் இரவில்
தடையினைப் பெற்றிருந்த
சுய சூழ்ச்சி ஒன்று
என் கனவாக
விதைக்கப்பட்டது .

பிரபஞ்ச நிழல்
கொண்டு தன்னை
மறைக்கப்பட்டுவிட்டதை
சுய ஒளி இன்னும்
அறிந்திருக்கவில்லை
இந்த இரவினை
இரவாகவே
வைத்திருக்கிறது.



நினைந்திடுதல்
நாளைய விழிப்பின்
விடியலை
என்ன செய்வதாக
இருக்குமென்று
யோசிப்பதற்குள்ளாக

உறுத்திக் கொண்டிருந்த
பகலொன்றை
வீழ்த்தப்படுவதற்குக்
காலம்  தன்
அமைவை
சுயபரிசோதனை செய்ய
தேவைப்படவில்லை
என் பிரபஞ்ச இரவின்
மவுனமே
போதுமானதாகிறது.



                       

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு