மிகுதி-திண்ணை
இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது கவிதை
http://puthu.thinnai.com/?p=3000
அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு .
http://puthu.thinnai.com/?p=3000
தன் எண்ணங்களில்
பிழைத்திருக்கும்
வார்த்தைகளை
வடிவமைக்கும்
நேரங்களில்
நிறைவு பெறுகிறது
என் மிகுதியான
ஆசைகள் .
அதன்
தொடர்ச்சியில்
எதனினும்
விலகிடாத
ஒன்றிணைப்பு
காலங்களினால்
தீர்மானிப்பதில்லை
என் அன்பின்
மிகுதியாலே
அறியப்படுகிறது .
இன்னுமும்
எஞ்சி இருக்கின்ற
காரணங்களை
கரைந்து விட கூடிய
மித மிஞ்சிய
நினைவாகும்
காத்திருப்பை
அதனதன்
காலம்
மிகுதியாக
ரசித்து கொண்டிருக்கிறது .
இதன் விளைவாக
மாற்றியமைத்த
என் இறந்த கால
நிமிடங்கள்
நிறைவு தன்மையற்றவையாக
மிகுதியாகிறது.
இறுதியில்
இயலாமை கொண்டு
எடுத்தாளப்பட்ட
நிர்பந்தங்களை
காலத்தை பழிக்க
செய்யும்
மிகுதியான
வாய்ப்பு
வழங்கியிருக்கிறது .
-வளத்தூர் தி.ராஜேஷ் .
Comments
Post a Comment