மிகுதி-திண்ணை

இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது கவிதை 


http://puthu.thinnai.com/?p=3000 

தன் எண்ணங்களில் 
பிழைத்திருக்கும் 
வார்த்தைகளை 
வடிவமைக்கும் 
நேரங்களில் 
நிறைவு பெறுகிறது 
என் மிகுதியான
ஆசைகள் .

அதன் 
தொடர்ச்சியில் 
எதனினும்
விலகிடாத 
ஒன்றிணைப்பு 
காலங்களினால் 
தீர்மானிப்பதில்லை 
என் அன்பின் 
மிகுதியாலே
அறியப்படுகிறது .

இன்னுமும் 
எஞ்சி இருக்கின்ற 
காரணங்களை 
கரைந்து விட கூடிய 
மித மிஞ்சிய 
நினைவாகும் 
காத்திருப்பை 
அதனதன் 
காலம் 
மிகுதியாக 
ரசித்து கொண்டிருக்கிறது .

இதன்  விளைவாக 
மாற்றியமைத்த 
என் இறந்த கால 
நிமிடங்கள் 
நிறைவு தன்மையற்றவையாக 
மிகுதியாகிறது.

இறுதியில் 
இயலாமை கொண்டு 
எடுத்தாளப்பட்ட 
நிர்பந்தங்களை 
காலத்தை பழிக்க
செய்யும் 
மிகுதியான
வாய்ப்பு 
வழங்கியிருக்கிறது .

                         -வளத்தூர் தி.ராஜேஷ் .

அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு