வலிகளின் நிலையில்லா தன்மை.
மிகவும் எளிதாக
அனைவரும்
உணரக்கூடிய
வலியொன்று
அழுத்தத்தின்
இயல்பை
மீறப்படும் செயலாய்
என்னால்
இயற்றப்பட்டது
நேற்று .
என் இயக்கங்களின்
வழிந்தோடும்
பிரபஞ்ச நேசங்களை
எடுத்துக்காட்டாய்
விபத்தொன்று
இனிதே
நடந்தது .
சில விபத்துகள்
ஏற்படும் பொழுது
பழியை எளிதாக
சுமத்த அமைகிறது
தன் கவன குறைவு .
பரவுகின்ற எரிச்சல்
உடலின் வலிகளை
பற்றிக்கொண்டு
பழைய வன்மங்களை
நினைவூட்டுகிறது .
பிதற்றப்படும்
வலி முனங்கள்
ஆயா,அம்மா ,அப்பா
தாண்டி பிரபஞ்ச
எண்ணத்தில்
ஒன்றிணைத்தது .
நட்பின் துணையை
ஹரிஹரன்
மெய்ப்பித்தான்
விழியோடு பேசும்
நம்பிக்கை வார்த்தைகளை
வலிகளின் மீது
தூவினான் .
துடித்த மனதின்
முதல் தேடல்
என் ஆயாவாக
இருப்பதில்
இருப்பின் விதையில்
ஆறுதல் அடைய
செய்தது .
காயத்தின் வலிகளின்
மீது எப்பொழுதும்
நிலையில்லா தன்மை
ஊடுருவுகிறது .
பிரபஞ்ச உணர்வு
உறவினர்கள்
நண்பர்களின் ஆறுதல்
சற்று பாதுகாப்பு
மேகமாய் பரவ
அவ்வபொழுது
உறக்கம் விழிப்பு
நிலையிலே வைத்திருக்கிறது .
-வளத்தூர் தி .ராஜேஷ் .
Comments
Post a Comment