வலிகளின் நிலையில்லா தன்மை.





மிகவும் எளிதாக 
அனைவரும் 
உணரக்கூடிய 
வலியொன்று 
அழுத்தத்தின் 
இயல்பை 
மீறப்படும் செயலாய்
என்னால் 
இயற்றப்பட்டது 
நேற்று .

என் இயக்கங்களின் 
வழிந்தோடும் 
பிரபஞ்ச நேசங்களை 
எடுத்துக்காட்டாய் 
விபத்தொன்று 
இனிதே 
நடந்தது .

சில விபத்துகள் 
ஏற்படும் பொழுது 
பழியை எளிதாக 
சுமத்த அமைகிறது 
தன் கவன குறைவு .

பரவுகின்ற எரிச்சல் 
உடலின் வலிகளை 
பற்றிக்கொண்டு 
பழைய வன்மங்களை 
நினைவூட்டுகிறது .

பிதற்றப்படும்
வலி முனங்கள் 
ஆயா,அம்மா ,அப்பா 
தாண்டி பிரபஞ்ச 
எண்ணத்தில் 
ஒன்றிணைத்தது .

நட்பின் துணையை 
ஹரிஹரன் 
மெய்ப்பித்தான் 
விழியோடு பேசும் 
நம்பிக்கை வார்த்தைகளை 
வலிகளின் மீது 
தூவினான் .

துடித்த மனதின் 
முதல் தேடல் 
என் ஆயாவாக 
இருப்பதில் 
இருப்பின் விதையில்
ஆறுதல் அடைய 
செய்தது .

காயத்தின் வலிகளின் 
மீது எப்பொழுதும் 
நிலையில்லா தன்மை 
ஊடுருவுகிறது .

பிரபஞ்ச உணர்வு 
உறவினர்கள் 
நண்பர்களின் ஆறுதல்
சற்று பாதுகாப்பு 
மேகமாய் பரவ 
அவ்வபொழுது 
உறக்கம் விழிப்பு 
நிலையிலே வைத்திருக்கிறது .
                        -வளத்தூர் தி .ராஜேஷ் .
 
 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு