தனித்திருப்பதன் காலம்-திண்ணை


June 19th, 2011 திண்ணையில் வெளியான கவிதை 

இப்பொழுதைய இந்த
தனிமை நிமடங்களை
எச்சரிக்கை மிகுந்த
தருணமாக
மாற்றியமைக்கிறது
காலம் .

தனித்திருப்பது ஒன்றும்
ஆபாயகரமனது அல்ல
கால சிந்தனை முறையை
அதனதன் நிறைவை
நிகழ செய்யும் ஒன்றினை
எப்பொழுதும்
செய்ய விட்டதில்லை
காலம் .

சுயங்கள் பின்னப்பட்டிருக்கும்
முடிச்சுகளை தனிமையின்
ஏதோ ஒரு நொடிகளும்
அதன் காலமும்
விடுவிக்க காத்திருக்கிறது .

காலத்தின் இயக்கம்
நடைபெறாத ஒரு
நிகழ்வை
காட்சிப்படுத்துகிறது
வெற்றிடத்தின் விசை
பரவல் .

அதன் நொடிகளின்
இடப்பெயர்வு
நினைவலைகளை
சிதறடிக்கிறது .

எதிர்ப்படுதலில் எந்தன்
மையநோக்கு விசை
குறிக்கப்படுகிறது
விலகிய கோணம்
மாற்றியமைக்கப்படலாம் .

உணர்த்தும் விசையின்
இயக்கம் விடுப்படுகிறது
ஈர்ப்பின் மையமாக
மாறுகிறேன்
விசையில் கரைகிறேன் .

இப்பொழுது
காலத்தின் அமைவில்
என்னை காண்பதற்கு
பதிலாக உணர மட்டுமே
முடிகிறது .
-வளத்தூர் தி .ராஜேஷ் .
அன்பின் நன்றிகள் திண்ணை மற்றும் நண்பர்களுக்கும் . 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு