கால மாற்றம்
முன்னெப்பொழுதும்
உருவாகியிராத
கால மாற்றம்
நாளாக நாளாக
சேர்ந்து கொள்கிறது .
வாழ்வின்
அடுத்த நிலைக்கு
உட்படும்
கால மாற்றம்
நிகழ்த்தப்படுகிறது.
கடந்தவையும் ,பெற்றவையும்
மன வலிகளை
கால மாற்றத்தினை கொண்டு
மறைத்து கொள்கிறேன் .
நிகழ்த்திய
சாத்திய கூறுகள்
மீண்டுமொரு முறை
வருவதற்கில்லை.
எதிர்ப்படும் அனைத்தும்
உந்தன் எண்ணங்களாகவே
உருவகமாகுகிறேன்
இன்றும்
நீ
நானாக
நான்
நீயாக
கால மாற்றம்
நிறைவேற்றப்படுகிறது .
-வளத்தூர் தி.ராஜேஷ்
Comments
Post a Comment