தனித்துவம் .
தோன்றிடாத தொன்மையை கொண்டு
விடுவிக்கப்பட ஒளிக்கதிர் ஒன்றினை
மெல்ல மெல்ல காட்சிப்படுத்துகிறது
என்னை .
நேற்றைய இன்றைய நாளைய
தீர்மானத்திற்கான கட்டமைப்பில்
இதுவரையிலும் இன்னுமும்
புறப்பட்டிருக்கவில்லை எந்தன்
காலமும் அதன் வெளியும் .
இயக்கங்களின் வெற்றிட நிறைவு
தன் எல்லைகளை
சரிபார்த்து கொள்கிறது
ஒவ்வொரு முறையிலும்
எந்தன் இயற்கையை பரிசோதிக்க.
அணுக்களின் தோன்றல்
இப்பொழுது சாத்தியமானது
என்னில் .அதன் ரகசியங்களை
அதனுள்ளே நிரப்பி கொண்டு
பரிணாமத்தின் வழித்தடங்களை
உருவாக்கி கொண்டது
எனக்கான முதல் அணு .
பெருவெளி என்னை
இயக்கமாக்கி விட்டன
தனித்துவங்களில் இனி
நானும் ஒருவன் .
-வளத்தூர் தி.ராஜேஷ்
Comments
Post a Comment