பிரபஞ்சத்தின் நிறைவு

மிச்சம் இருக்கின்ற இந்த நொடியையும் 
உன் எதிர்காலத்தில் சேகரித்து கொள்கிறாய் 
என் தவிப்பின் வரையறையை  உன் கனவில் 
கண்டு கொள்வாய் .
என் அன்பை எனக்கென்று ஏதும் 
இல்லாமல் அனைத்தும் உனதாக்கினாய் 
என் பிரபஞ்சம் மட்டும் நீ ஒன்றும் செய்யாது 
இருப்பது மேலும் உன் நேசிப்பினை 
ஆழப்படுத்துகிறது .
பிறகு நீயே கனவில் கூறினாய் என் 
பிரபஞ்சம் நானாக மட்டுமே இருக்கமுடியும் என்று .
அப்பொழுதிய என் வெட்கம் உன் பிறப்பிடமானது 
இப்பொழுது செய்ய வேண்டியது நம் புரிதல் மவுனத்தை 
எதிர்க்காலத்திலும் தொடர ஆணையிடு.
நான்  யாரன்று அறியாமலே நீ கனவில் பிதற்றும் 
வார்த்தையை நம்ப சொல்கிறாயா ?
என்று கேள்விகளை எளிதாக சொல்லி விட்டாய் 
நம் கனவிலும் ஒன்றுப்படும் நம் உணர்வுகளை 
மித மிஞ்சிய அளவில் சேர்த்து கொண்டாய் 
அதன் விளைவே உன் கேள்வியானது .
இதன் பதிலை நான் கூறுவதை விட நீயே மெய்ப்பிக்கும்
நம் நம்பிக்கையை உறுதி செய்வாய் .
யாரென்றே அறியாத உன்னையும் 
உன் நினைவின் வருகையே  உள்ளம் கடந்து 
இந்த பிரபஞ்சத்தை நிறைவு செய்கிறாய் 
கரம் பிடித்த பின் என்னவெல்லாம் செய்வாயோ .
                                                                                தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு