உறைந்த நினைவுகளில்
என் இருப்பின் பதிவு
கூடுமானவரை நிகழ்வின்
கூடுமானவரை நிகழ்வின்
உறைவிடமாகவே
உறைந்து போய்விட்டன வீடு
இனி உறைந்த நினைவுகளில்
கரைகிறது நிகழ்வுகள் .
பிறப்பின் நுழைவு வருவதற்கு
முன்பாகவே முழுமையடைந்த
நிர்பந்தங்கள் ஒவ்வொன்றாக
விளைவிக்கப்பட்டன
அதன் காட்சியமைவு நீங்கள்
நம்பும் அளவிற்கு நம்பிக்கையாகிறது
இப்பொழுது சினத்தின் அச்சம்
உள்ளார்ந்த நெறியாகி நிலைத்திருப்பதை
உங்களால் இனி வேடிக்கை மட்டுமே
பார்க்க இயலும் .
வீட்டின் அமைவை
கூடுமானவரை உங்கள்
விருப்பத்தில் நிறைவேறுவதை
உறுதி செய்து கொள்ளுங்கள்
ஏன்னெனில்
தூக்கி வீசப்பட்ட பல
கனவுகளின் மிச்சம் இதிலும்
ஒளிரக்கூடும் .
மகிழ்வின் துயரத்தை
நீங்கள் அறிந்திராத இந்த வீட்டின்
வெற்றிடத்தில் சேமிக்கப்படுகிறது
அவ்வாறான ஒன்றை நீங்கள்
பல நாட்களாக மறந்து
மறைத்து போனதை சில இருப்பு
உங்கள் கண்கள் மீது நீர்மமாக
காட்டி கொடுத்து விடுகிறது .
என் சுயத்தின் சில
பரிணாமத்தின் இறுதியாக
நினைக்க வாய்ப்புள்ளது
நீங்கள் அதை என் வீட்டின்
சுவர்களில் எளிதாக
காண இயலும்
ஆனால்
அதை உணர்வதற்கு
பல ஒளி ஆண்டுகளின்
பயணத்தில் சிறிது நேரம்
இளைப்பாறும் உயிரினத்திடம்
இருக்க இனியும் வாய்ப்பில்லை .
-
வளத்தூர் தி .ராஜேஷ்
Comments
Post a Comment