போதுமானது .







இப்பொழுது தொடங்கிய 
இந்த நொடி 
உயிர்ப்புடன் இருப்பதற்கு 
அதன் இயக்கம் காரணமாவதற்கு
முன்பாகவே 
 நினைக்கப்படுதலில் 
முழுமை அடைந்து விட்டது .

என் நொடிகள் அனைத்தும் 
காலத்தால் செய்யப்பட்டது 
அல்ல 
யாதுமற்ற வெறுமையின் 
வெற்றிடத்தில் சேகரித்த 
மிச்சங்கள்  மட்டுமே .

என் மன மகிழ்வு அனைத்தும்
இறுக்கமான நிலையில் 
இருந்தே தொடங்குகிறது  
அதனதன் வாழ்வதனை 
அதனதன் நொடிகளாய் 
கழிக்கின்றது.

என் அக மேற்பரப்பில் வழிகின்ற 
நீர்மம் திட நிலையை 
அடைவதற்கு பல 
யுகங்கள் காத்திருக்க
அவசியமில்லை 
இந்த கனமேற்றும் 
தனிமை போதுமானது .

                                     தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை