காலத்தின் கம்பீரம்
காத்திருக்கும் இந்த நொடி
இறுக்கத்தின் நீளும்
தன் துரோகத்தின்
நீட்சியை
பரிவன்போடு
வளர்ந்து விடுகிறது
இந்த நிகழ்காலம் .
தன் குற்றஉணர்வு
விழிப்பின் அமைவை
கூடுதலான காலம்
கொண்டே வன்மத்தை
சேர்த்துவிடுகிறது
முக்காலத்திலும்.
என் சுயத்தின் மீது
கம்பீரமாய் அமர்ந்து
இருக்கும் வலிகள்
பெரும்பாலும் மவுன
இசையாகி விடுகிறது .
-தி .ராஜேஷ் .
Comments
Post a Comment