ஒளியேற்றும் அகம்
செய்தறியாது ஒரு சூழல்
ஈடுபாடு இன்மையால்
சோம்பலில் அமர்ந்திருக்கும்
என் உழைப்பு
பழித்து கொண்டு
கொண்டாடுகிறது .
என் தனிமை
அமைதியின்மையை
ஆறுதலாக கொண்டு
தன் துணையாக
அழைத்து வருகிறது
இன்றைய நாளும் .
இந்த குறுகிய வெற்றிடத்தில்
விசை பரவும் இருப்பை
அச்சமூட்டும்
இந்த பிரபஞ்ச தொடர்பு
இருள் சூழும் நேரத்திலும் ஒளியேற்றும் அகமாகிறது.
-தி .ராஜேஷ் .
Comments
Post a Comment