ஒரு வீடு





முன்னெப்பொழுதும் 
இல்லாத மவுனத்தை 
கொண்டிருக்கிறது 
ஒரு வீடு .

சுவர்களின் சுண்ணாம்பு 
விரிசல்கள் தனி தனி 
ஓவியமாகவே வீட்டின் 
வரலாறை சொல்கிறது .

பல நூற்றாண்டின் சுவாசம் 
படிமமாக உறைந்து 
போயிருக்கிறது .

யாதுமற்ற ஒரு வீடு 
வலியின் இருப்பை 
இன்றும் விட்டு 
வைக்கவில்லை.

காட்சிப்படுத்தும் நிகழ்வு 
ஒளியின் சேர்ப்பு மட்டுமே 
காலத்தை உணர செய்ய 
கூடுமானவரை ஊரில் ஒரு 
வீடு இது போல் அமைந்து 
விடுகிறது .

ஒவ்வொரு முறை ஊருக்கு 
செல்லும் பொழுது காணும்
சிதிலமடைந்த ஒரு வீடு
வன்மத்தை மற்ற 
வீடுகளுக்கு 
தன் எல்லையை 
பரப்பி கொள்கிறது .

                              -தி .ராஜேஷ் .



Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு