ஒரு வீடு
முன்னெப்பொழுதும்
இல்லாத மவுனத்தை
கொண்டிருக்கிறது
ஒரு வீடு .
சுவர்களின் சுண்ணாம்பு
விரிசல்கள் தனி தனி
ஓவியமாகவே வீட்டின்
வரலாறை சொல்கிறது .
பல நூற்றாண்டின் சுவாசம்
படிமமாக உறைந்து
போயிருக்கிறது .
யாதுமற்ற ஒரு வீடு
வலியின் இருப்பை
இன்றும் விட்டு
வைக்கவில்லை.
காட்சிப்படுத்தும் நிகழ்வு
ஒளியின் சேர்ப்பு மட்டுமே
காலத்தை உணர செய்ய
கூடுமானவரை ஊரில் ஒரு
வீடு இது போல் அமைந்து
விடுகிறது .
ஒவ்வொரு முறை ஊருக்கு
செல்லும் பொழுது காணும்
சிதிலமடைந்த ஒரு வீடு
வன்மத்தை மற்ற
வீடுகளுக்கு
தன் எல்லையை
பரப்பி கொள்கிறது .
-தி .ராஜேஷ் .
Comments
Post a Comment