இணைத்து கொண்டே.
வேட்கையின் தீவரம் இன்னுமும்
முடிந்த நிலையில் இல்லை
அதற்குள்ளாகவே அடுத்த பசியில்
உன் நம்பிக்கை விதைக்கப்படுகிறது .
பார்வையின் பகை கூச செய்கிறது
தேடுதலான வாழ்வில்
நிறைவை கொண்டு உருவாக்கிய
பொருள் என்றுமே இருந்ததில்லை .
கனிந்து பேசும் மொழி கூட
செவி கொண்டு
அறிந்திருக்கவில்லை
வயிறு கொண்டே
கொண்டாடுகிறது .
மீதம் என்றே பேச்சை இது வரை
கேட்டிருக்கவில்லை
இருக்கிறது என்னவோ பசி தான் .
இறுதியில் தடையின் மீது
செலுத்தப்படும் குற்றம்
முயற்சியாகவே
கருத வேண்டியிருக்கிறது
இன்று வரை செய்து வந்தவையும்
அவையாவே நிர்பந்தத்தில்
மேலும் மேலும்
தன் ஒளியை கூட்டுகிறது
பசியையும் இணைத்து கொண்டே .
-தி .ராஜேஷ் .
Comments
Post a Comment