இன்றும் அப்படியே .
துருத்திய கனவொன்று
பகலிலும் காண கிடக்கிறது
இயல்பை மிஞ்சும் அளவில்
சில நூற்றாண்டின் வன்மம்
மேலும் வலிமையடைகிறது .
விருப்பும் காரணம்
இன்னும் உருவாக்கப்படவில்லை .
தோன்றலின் அமைவு எப்பொழுதும்
சந்தேகத்தின் மீதே அமர்த்தப்பட்டிருக்கிறது .
எழுகின்ற நம்பிக்கை வெறும்
சொல்லாகவே உணர காலம்
எதையும் விட்டு வைக்கவில்லை
இன்றும் அப்படியே .
-தி .ராஜேஷ்
Comments
Post a Comment