இன்றும் அப்படியே .




துருத்திய கனவொன்று 
பகலிலும் காண கிடக்கிறது 
இயல்பை மிஞ்சும் அளவில் 
சில நூற்றாண்டின் வன்மம் 
மேலும் வலிமையடைகிறது .


அதன் உறுதியான சிதைவை 
விருப்பும் காரணம் 
இன்னும் உருவாக்கப்படவில்லை .
தோன்றலின் அமைவு எப்பொழுதும் 
சந்தேகத்தின் மீதே அமர்த்தப்பட்டிருக்கிறது .

எழுகின்ற நம்பிக்கை வெறும் 
சொல்லாகவே உணர காலம் 
எதையும் விட்டு வைக்கவில்லை 
இன்றும் அப்படியே .
                                -தி .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு