நானும் ஆக்கப்பட்டேன் .
பிறர் செய்யாமல் இருப்பதை
தொடர விழையும் ஆவல்
தடையை தாங்கி கொண்டிருக்கிறது
தகர்த்து எரிந்து விடும் அளவுக்கு
வலிமை இருந்தும் பழமையின் நிர்பந்தம்
ஆழமாகவே விதைக்கப்பட்டிருகிறது
புதிய மரபின் மறு ஆக்கம் எப்பொழுது
தழைத்தோங்கும் என்ற நம்பிக்கை வெறும்
பிதற்றல் இல்லையென மேம்படுகிறது செயல் .
இருந்தும் காலத்தின் பிழையில்
நம்மை சேராத எந்த ஒரு பயன்பாடும்
இன்று வரை குற்றமாகவே
நிராகரிக்கப்படுகிறது அவ்வழியே நானும்
ஆக்கப்பட்டேன் .
-தி .ராஜேஷ் .
Comments
Post a Comment