ஒப்பற்ற வெளி







முடிவில்லா நெறியினை 
வழிபட்டு வந்ததன் 
வினை 
பழியொன்றை என்னில் 
சேர்க்கப்பட்டன .

நன் மதிப்பை 
குலைக்கும் விதமாக 
செயலும் துணை 
சேர்ந்ததாக 
அறிவிக்கப்பட்டன .

தன்னை அறிய 
நேரம் இல்லாத 
காரணத்தில் 
மற்றவை அறிந்து 
கொள்வதன் விருப்பம் 
இப்பொழுது 
எனக்காகிறது .

தயவு எனக்காகும்
நேரத்தில் மற்றவையை 
பரிந்துரை செய்ய 
இன்னும் கூடுதல்
பணிவு அவசியமாகிறது . 

மொத்தத்தில் சிதறிய 
மனங்களை  அனைத்தும் 
ஒன்று சேர்த்து கொள்கிறது 
ஒப்பற்ற வெளி .
                   -தி .ராஜேஷ் 



Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு