ஒப்பற்ற வெளி
முடிவில்லா நெறியினை
வழிபட்டு வந்ததன்
வினை
பழியொன்றை என்னில்
சேர்க்கப்பட்டன .
நன் மதிப்பை
குலைக்கும் விதமாக
செயலும் துணை
சேர்ந்ததாக
அறிவிக்கப்பட்டன .
தன்னை அறிய
நேரம் இல்லாத
காரணத்தில்
மற்றவை அறிந்து
கொள்வதன் விருப்பம்
இப்பொழுது
இப்பொழுது
எனக்காகிறது .
தயவு எனக்காகும்
நேரத்தில் மற்றவையை
பரிந்துரை செய்ய
இன்னும் கூடுதல்
பணிவு அவசியமாகிறது .
மொத்தத்தில் சிதறிய
மனங்களை அனைத்தும்
ஒன்று சேர்த்து கொள்கிறது
ஒப்பற்ற வெளி .
-தி .ராஜேஷ்
Comments
Post a Comment