கேள்விகளின் விடை
பழமை கொண்டு நீக்கிய கேள்விகள்
விடை தேடுவதற்கான வேட்கையினை
ஏதோ சில கேள்விகளால் மட்டுமே
பெறப்பெற்றுகின்றன .
அதை கண்டதைவதில்
அச்சங்கள்
சூழப்பட்டிருக்கிறது
மாய வலைகளும்
பின்னப்படிருக்கிறது
சிக்கி கொள்ள எதுவாக
பொய்க்கும் நம்பிக்கையை
இரையாக தூவி உள்ளனர் .
ஒரு நம்பிக்கை பொய்க்கும்
பொழுது நீங்கள் இது வரை
நம்பிய உண்மை மெய்ப்பிக்கப்படுகிறது .
அவை எவையாக இருந்தாலும்
கேள்வியின் பதில்களோ
பதிலின் கேள்விகளோ
பல கற்பிதங்கள் மாய்த்து கொள்வதற்கு
துடித்து கொண்டிருக்கும் அக்கேள்வியின்
நிலையை அந்த விடை அறிந்திருக்குமா
என சந்தேகம் வலுப்படுகிறது .
வரலாற்றின் உண்மை அனைத்தும்
புதைந்து போனவையாக இருப்பினும்
அவையாவற்றிற்கும் நிழல் பிம்பமாக
இன்றுவரை உலவுகின்ற சான்று
நாம் மட்டுமே .
ஆதி கேள்விகள்
இன்றைய பதிலை
எப்படி ஏற்றுகொள்ளும்
இரண்டுமே .
தி .ராஜேஷ் .
Comments
Post a Comment