இயலும்.
அலங்கரிகின்ற
தன் ஆணவத்தின்
மிதமிஞ்சிய அறியாமையை
குறிப்பெடுப்பதால்
மேலும் ஒரு கிரீடம்
உங்களால் சூட்டப்படுகிறது .
இதன் கணமேற்றும்
பார்வையை மேலும்
கூர்மையாக்குகின்ற
செயலாக்கம் உங்களால்
நிறுவப்படுகிறது .
நடந்தேறும்
ஒரு முடிவனை
இப்பொழுது உங்களால்
ஏற்றுகொள்ளப்பட்டிருக்கும் .
தன் சுய ஒளியின்
நிரபிரிகைகள்
கவனச்சிதறலாகிறது.
சினத்தின் அச்சம்
உள்ளார்ந்த நெறியாகி
நிலைத்திருப்பதை
உங்களால்
இனி வேடிக்கையாக
மட்டுமே பார்க்க
இயலும்.
-தி .ராஜேஷ் .
Comments
Post a Comment