தனிமை


இயல்புகள்
மீறுகின்ற
செயலாய்
என் தனிமைகள்
அதன்
விருப்பங்கள் போல்
தன்னை
அலங்கரித்து
கொள்கின்றன ...

சிந்தனையின்
துணையும்
இல்லையென்றால்
கொடுமை தான்
தனிமை ...

ஆனாலும்
மிகவும்
நேசிக்கிறேன்
என் எண்ணங்கள்
இன்னும்
விரிகிறது
உன் இருப்பை
போல என்
பிரபஞ்சமே ...

உன்னை
சிறு வயதில்
கொண்டே
நேசிப்பதால்
உன் எண்ணம்
இன்றி வேறொரு
எண்ணம் வந்தாலும்
அனைத்தும் உன்னில்
அடக்கமாகிறது
என் தனிமையும்
அதில் இருப்பதால்
இன்னும் அதிகம்
நேசிக்கிறேன் ..

பிரபஞ்சத்தின்
நினைவுகளில்
நான் மறதியாகி
போனாலும்
என் தனிமையின்
முழுவதும்
உந்தன்
நினைவாக
எங்கும் நிரம்பி
இருப்பாய்..

என் தனிமையை
மிகவும் நேசிக்கிறேன்
அவை உன் மூலம்
பெறப்படுவதாலே ...
           தி .ராஜேஷ் .
                     

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு