அதற்காகவும் இதற்காகவும் .

எதையும் அறிந்து 
கொள்வதற்காக 
எழுதுவதில்லை 
அறிந்தவையும் 
எழுதவதில்லை 
இருந்தும் ஏன்
எழுதப்படுகிறது. 
அறியப்படாத 
ஒரு வாழ்வை
மனதை  
நிலைநிறுத்தி 
கொள்ளும் 
பதிவை இருப்புகளாக 
நிலைநாட்டும் 
போராட்டமே 
அனுபவ பாடமாகிறது. 
அதற்காகவும் 
எழுதப்படுகிறது
நீ அறிந்து வைத்த 
புறக்கணித்த  
ஒன்றுமில்லாத 
ஒன்றாக கருதும் 
இவை வெறும் 
சொல்லாகவே 
இருந்து விட்டு 
போகட்டுமே 
இதற்காகவும் 
எழுதப்படுகிறது ..
                   -தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

Testing :)