நிகழாமல் இருக்க



இவையெல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதியவை .


புரிதல்கள் கொள்ளாமலே 
அன்பு வெறுப்புகளாக
மாறும் வாய்ப்புகளை
பெற்று தருகிறது
உன் கோபங்கள் ..
என் பேச்சுக்களை  
அறிமுகம் செய்து விட்டு 
முடிவுரையாக மாற்றுகிறாய்
உனக்கான நியாயங்கள்
தொடர்ந்து கிடைத்து
விடுகிறது ..
------------------------------------------------------------------
உன் கோபங்களும்
வெறுப்புகளும்
தவறாக நினைக்கவும்
நான் நேசித்த அன்பு
கருதவதில்லை ...
கருதுகிற நிலைமைகள்
தொடர்ந்து வருவதில்லை
என் பிம்பங்கள்
கானல் நீராகவே
உன்னிடம் தென்படுகிறது ..
குழப்பத்தின் வெளிச்சம்
குறைய தொடங்கியதும்
நம் அன்பு நிலை
என்றும் போல்
நீடித்து நிலைத்திருக்கும்
பிரபஞ்ச சக்தி போல் ..
 ---------------------------------------------------------------

நம் பிறிவு
நிலைகளிலும்
ஊடலின் தன்மை
மிகுதியாகி நம்
நினைவுகளுடன்
பயணிக்கிறது
காலம் ..
மவுனங்களையும்
நேசிக்க கற்று கொள்ள
முடிகிறது என் தனிமைகளில்..
 ------------------------------------------------------------------
                                      தி .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு