புரிதலின் பிழையா ?

தன் முனைப்பின் 
ஆளுமையில்
பொழிந்த என் 
வசந்தமான 
எண்ணங்களினால் 
அலங்கரிக்கின்றன 
என் பக்கங்கள் .

நம்பிக்கையின் 
விருப்பங்களாக 
நகர்கின்றன காலங்கள்.

எதிர் கொள்ளும் 
முரண்களில்
வாய்புகளின் 
தேடலாக சவால்கள் 
காத்திருக்கிறது 
சாதனைகள் படைக்க.. 



-------------------------------------------------------------
என் அச்சங்களை 
கண்டறிந்து விட்டு
ஏளனம் செய்வது
வாடிக்கையாகி விட்டது
என் முயற்சிகளுக்கு ...

இருந்தும் தொடர்கிறேன்
தோல்விகளின்பாதைகள்
வழியெங்கும் வெற்றியின் 
ஆரவாரம் கேட்கிறது ...
பெறப்போகும் உயர்வுகள் 
என்னை சிறுமைப்படுதாமல் 
நான் பெற்ற தோல்விகள் 
தாங்கி கொள்ளும் ..

-------------------------------------------------------------------
வாய்ப்புகளில் சூழப்பட்ட 
முடிவுகளாய் திணறி 
கொண்டிருக்கிறேன் ..

எது முடிவு செய்ய வேண்டுமோ 
அது நிகழ்ந்து கொண்டிருகிறது 
என் சம்மதம் இல்லாமல் ...

எதுவும் இன்பமாக மாற்ற 
தெரிந்த அன்பிற்கு 
அன்பாக இருப்பதில் தான்
பிரச்சனையோ இல்லை
இதுவும் நான் செய்த
புரிதலின் பிழையா .

----------------------------------------------------
                                             -தி .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு