இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை http://puthu.thinnai.com/?p=7166 பொருள் கொண்டு மனிதம் மதிப்பீடு செய்யப்படும் வழிமுறையை பழக்கப்படுத்தி கொள்வதில் இனி சிக்கல் இருக்கபோவதில்லை. மற்றவர்களை உதாரணம் கொண்டு உருவாக்கப்படவில்லை இந்நிலை. ஒரு நீடித்த பகலில் கைவிடப்பட்ட நம்பிக்கையை சுமந்து கொண்டு சுய நீர்மம் நிறைவில் மனதின் அழுத்தங்களை தாங்கி கொள்ள இயலாத நிலையில் என்னையும் ஆட்கொண்டது நாளை உங்களையும் தான் . இனி உயிரினம் வாழ நிர்பந்தங்களை பட்டியல் கொண்டு மன குற்றங்களை மறைத்து மறந்து வாழவே உசித்தம் . அது மிக எளிதான இயல்பு தான் . -வளத்தூர் தி.ராஜேஷ் அன்பின் நன்றிகள் திண்ணை நண்பர்களுக்கு .
தேடல் வழியில் என் கனவினை காண்பதற்கு பிரபஞ்சம் தோன்றா நிலையில் அதன் வெற்றிடத்தில் இல்லாமையின் இருப்பை உணர்த்தி கொண்டிருக்கும் சுய திறவுக்கோல் இன்னுமும் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது . நிறுத்தம். ஒரு இடைவெளியாக என்னால் குறிக்கப்பட்டு முடிவிலியாக இன்று மாறும் வினையினை பின் எதிர்காலத்தின் ஒரு நிகழ்காலம் தன் இயங்குதலை மேலும் தொன்மையாகும் . பிறகு சொல்லப்பட்டவை இன்னுமும் முடிக்கப்படவில்லை . நிகழ்வின் அதிர்வுகள் உணர்த்துவதற்கு என்று ஒரு பிரபஞ்ச இயக்கத்தை நினைப்பதற்கு இந்த நொடியின் பிறகு அவை என்னுடையதாக மாறும் காலத்தில் நான் இருக்கபோவதில்லை . -வளத்தூர் தி.ராஜேஷ் .
Comments
Post a Comment