என் கருதுகோள்கள் .

என் கருதுகோள்கள் 
ஒவ்வொன்றாக 
உதிர தொடங்குகிறது 
பொய்மையின் உருவில் ..

வழியெங்கும் அதன் 
பிம்பங்கள் என்னை 
துரத்துகிறது 
உண்மையின் 
சிந்தனையாய் ..

குறிப்பிட்டு சொல்ல 
ஏதும் இல்லாமலே 
வார்த்தை இயலாமையில் 
உறைகிறது ..

அவரவர் நியாயங்கள் 
பொய்மையும் 
உண்மையும் 
உருவில் 
அலைந்து 
கொண்டிருக்கிறது ..

அவர்களுக்கு 
விருப்பமானவற்றை 
அணிகிறார்கள் 
நம்மையும் 
அணிவித்து 
விடுகிறார்கள் 
அவர்களின் 
வாயிலாகவே.



                -தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு