நானும் தான்.
பொய்மை என்னை
ஆட்கொள்ளும்
போதெல்லாம்
போலி புன்னைகையில்
புதைந்து போகிறது
காரணமற்ற எண்ணங்கள் ....
நடப்பவை தீர்மானிக்கும்
உரிமை என்னிடம்
இருந்தும் ஏதும்
செய்யாமல் போவது
வழக்கமானது ...
மாற்று சிந்தனைகளை
வழியற்று அழைத்து
செல்கிறது என் சோம்பல்
என்றேனும் விழிப்பு நிலை
வந்து விட்டால்
தொலைந்து போவது
சோம்பல் மட்டுமல்ல
நானும் தான் ....
- தி .ராஜேஷ் .
Comments
Post a Comment