பொய்மையும் நானும்
பொய்மை நிலையில்
சிறதும் வெட்கம் இல்லாமல்
உலவுகின்ற என்னை புகழ்கிறான்
என் நிலை கொண்ட ஒருவன் ...
அந்த ஒருவனை பற்றியே
தொடர் சங்கிலி போல்
பரவி கிடக்கிறது
என் மன சங்கிலி ......
தகர்த்து எரிய வேண்டிய
நான் பொய்மையின்
புகளுரையில் வெற்று படகு
போல் தனித்து விட படுகிறேன்
மற்றொருவனை போல் தொடரும்
நிலையில் பொய்மையும் நானும் ..
-தி .ராஜேஷ்
Comments
Post a Comment