பாரதியார் கவிதைகள்

எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின் 
ஏழைமை யுண்டோடா ?-மனமே 
பொல்லாப் புலுவுனைக் கொல்ல நினைந்த பின் 
புத்தி மயக்கமுண்டோ ?

உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்  
உள்ளங் குலைவ துண்டோ -மனமே 
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா ? 

சித்தி னியல்பு மதன்பெருஞ் சக்தியின் 
செய்கையுந் தேர்ந்துவிட்டால் -மனமே 
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ சிறிதுமுண்டோ ?

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத் 
தேவ னுரைத் தனனே -மனமே 
பொய் கருதாம லதன்வழி நிற்பவர் 
பூதல மஞ்சுவரோ?

ஆன்ம வெளிக்கடல் மூழ்கி திளைப்பவர்க் 
கச்ச முண்டோடா ?-மனமே 
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு 
தேக்கித் திரிவமடா.

                              -பாரதியார் .
----------------------------------------------------------------

Comments

  1. பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த பின் புத்தி மயக்கமுண்டோ?
    பாரதியின் உயரிய ஆன்ம ஒளிக் கவிதை.,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு