பாரதியார் கவிதைகள்
எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா ?-மனமே
பொல்லாப் புலுவுனைக் கொல்ல நினைந்த பின்
புத்தி மயக்கமுண்டோ ?
உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ -மனமே
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா ?
சித்தி னியல்பு மதன்பெருஞ் சக்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால் -மனமே
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ சிறிதுமுண்டோ ?
செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தேவ னுரைத் தனனே -மனமே
பொய் கருதாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சுவரோ?
ஆன்ம வெளிக்கடல் மூழ்கி திளைப்பவர்க்
கச்ச முண்டோடா ?-மனமே
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா.
-பாரதியார் .
----------------------------------------------------------------
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த பின் புத்தி மயக்கமுண்டோ?
ReplyDeleteபாரதியின் உயரிய ஆன்ம ஒளிக் கவிதை.,