ஏளனத்தின் இன்றியமையாமை
இன்று வரை
நீ இன்றியமையாததற்கு
அன்றே நீ செய்த விதை
வேருன்றி இருக்கிறது
இதில் தயக்கம் ஏதும்
இல்லை சொல்வதற்கு ...
விளக்கம் தேடுவதற்கு
கொடுபதற்கும் விளங்கவில்லை
எம் மொழியில் ...
புரியாத யாரும் அறியாத
அம்மொழியில் நான்
மொழி பெயர்ப்பு செய்கிறேன்
பிறந்த குழந்தை சிரிப்பில்
இன்னுமா விளங்கவில்லை ...
தூக்கி வீச பட்ட என்
கனவுகளின் மிச்சம்
இதிலும் ஒளிர்கிறது..
எதனினும் கொண்டு
உன்னை அறியேன்
இதோ என் எண்ணங்களை
பற்றி கொள் என்று தானே
சொன்னேன் அதற்க்காக
அளவில்லாமல் கொல்லும்
உன் ஏளன பார்வை
என்னை வதம் செய்கிறது ...
-தி .ராஜேஷ்
Comments
Post a Comment