உண்மையின் நிழல்

தனிமை உணர்வில் உளறுவதில் 
கூட ஒரு வித வெறுமைவந்து
தொற்றிக்கொள்கிறது என்னை ...
யாரும் இதை கேட்கபோவதில்லை 
என்ற நினைப்பில் என் மனதோடு
பேசும் சுயத்தின் உண்மை 
என்னை வெறுமையின் 
பிடியில் தள்ளி விடுகிறது ...
அதன் முனைப்பில் 
காணமல்போகும் நான் 
சில நிமிட உண்மையின் நிழல் 
கூட பொய்மையை விட்டு வைக்காமல்
மேலும் தனிமையின் துணைக்கு
வலு சேர்க்கிறது என்னை வழி 
நடத்தி செல்லும் என் பொய்கள் ...

                                - தி.ராஜேஷ்

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை