வன்மம் குடிபுகுதல்

இன்றைய நாட்களை 
மூன்று ஆண்டுகளின் 
நினைவின் பெரும் நிகழ்வுகள் 
உள்ளடைக்கியது ..

நேசங்களில் 
விட்டு கொடுப்பவை 
பரிமாற்றத்தின் 
பசுமைகளாக 
நிறைவு தன்மை 
உடையவை ..

கணத்தின் மேன்மை 
கூடுகிறது அவை 
பெறுவதால் மட்டுமே 
விலகுதல் 
நியாயமாகாது ..

அன்பை உள்ளத்தில் 
பரவி சென்றதால் 
மறைவதும் மறைத்தலும் 
உனக்கு விளையாட்டானது ..

எதுவாக நினைப்பினும் 
நான் கொள்ளும் அதே 
நிலையை நீயும் 
பெறுவாய் என்பது 
அறிவீனமே ..

யாருக்கும்  கிடைக்கபெறாத 
சூழலை நமக்காக 
உருவாக்கினாய் 
அனுதினமும் வலிகளை
சோதனையை செய்யும் 
வன்மம் குடிபுகுதலில் 
புரிதல் கூட 
நிலையில்லாமையில் 
தடுமாறுகிறது .
                        -தி.ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு