தவறின் பிழைகள்.

முற்றிலும் முறிந்து விட்ட நிலையை 
உணர வைத்து கொண்டிருக்கிறது 
தவறின் பிழைகள் ...

சரியென்று ஏற்றுகொள்வதில் 
மனம் தவித்தாலும் 
நிர்பந்தத்தின் கட்டாயம் 
அமைதியின்மையை
நாளும் உருவாக்குகிறது ...

தவறென்று ஒதுக்கி விடுவதில்  
எளிதாக இருந்தாலும் 
ஏற்றுகொள்வதற்கு 
அகத்தின் உருவாக்கங்களின் 
அலறல் ஒலி ஓய்வின்றி 
எதிரொலிக்கிறது ...


உணர்த்தும் பிழை காலத்தை 
கடத்தி செல்கின்ற கருவியாகவே 
செலுத்தப்படுகிறது ...

உள்ளத்தின் அலறல்களை 
மவுனத்தை கொண்டு பயிற்றுவிக்கிறேன்
அடங்குதலில் முறையிடுவது 
காற்றின் உருவம் போன்றதாகிறது ...
                                              -தி .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு