அச்சங்களின் நிழல் நானாக
எதிர்ப்படுபவைகள்
அனைத்திலும்
அச்சம் என்னை
சூழ்கிறது ..
அவைகள்
நிலையில்லாமல்
துரத்துகிறது
நானும்
ஓய்வில்லாமல்
ஓடுகிறேன்..
அச்சத்தின்
நிழல்கள் கூட
அமைதியின்மையை
உண்டாக்குகிறது ..
பின்பற்றப்படும்
அச்சங்கள்
நிர்பந்திக்கபட்டவையாக
தோற்றம் கொள்கிறது ..
அவைகளை எதிர் கொள்ள
நானும் அச்சமாகிறேன்..
தி .ராஜேஷ்
Comments
Post a Comment