தனிமை நிலைகளில்

என்றாயின் நான் காணும் 
சுயங்களில் நியாயப்படுத்தும் 
என் விருப்பங்கள் .

நிர்பந்தங்களின் ஆளுமைகள்
நீள்கிறது மற்றொருவனை நோக்கி ..

அன்பாய் பரிணமிக்கும் எந்தன் 
தனிமை நிலைகளில் பெறுகின்ற 
யாவும் விரும்பப்படுகிறது 
அதனதன் இயல்பில்..

எந்தன் உருவாக்கத்தின் 
எதிர்ப்புகள் அனைத்தும் 
முறைப்படுத்தப்படுகின்றன 
நேசங்களின் விருப்பங்களாக
தொடர்கிறது காலங்கள் ..






                                -தி.ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு