மவுனம்
மவுனத்தின் வடிவம்
எப்படியெல்லாம்
இருக்குமென
யூகிக்கிறேன்..
மவுனத்தை
பெருபவனிடமும்
வழங்குபவனிடமும்
வேறுப்பாடு காண
இயலவில்லை ..
இருந்தும் தேடலின்
ஒரு மவுனத்திற்கும்
அடுத்த மவுனத்திற்கும்
இடையே உள்ள
தூரங்கள்
ஒளி ஆண்டுகளாக
நீண்டுள்ளன ..
மவுனத்தை அடையும்
பொழுது தோன்றிய
வடிவத்தை காண இயலாது
ஏனெனில் எல்லாவற்றிலும்
என் முகம் கொண்டே திரிகிறது ..
-தி .ராஜேஷ்
மவுனத்தை
ReplyDeleteபெருபவனிடமும்
வழங்குபவனிடமும்
வேறுப்பாடு காண
இயலவில்லை ..
கண்டிப்பாக வேறுபாடு உண்டு....
காலம் உணர்த்தும்..
வணக்கம் அண்ணி,
ReplyDelete//மவுனத்தை
பெருபவனிடமும்
வழங்குபவனிடமும்
வேறுப்பாடு காண
இயலவில்லை //
அந்த வேறுப்பாடு எவ்வகையில் வெளிபடுவது அல்லது பெறுவது என்பதை பொறுத்தே மவுனத்தின் வேறுபாடு என்னால் காண இயலவில்லை அண்ணி .
காலம் கண்டிப்பாக உணர்த்தி கொண்டு தான் இருக்கிறது அண்ணி ஆனால் அவை மிகவும் கொடுமையாக உள்ளது ..இருந்தும் வலிகளை ஏற்றுகொள்ள பழக்கப்படுத்தி கொண்டேன் ..என்னில் நான் காணும் சுயத்தின் மவுனம் மெருகேறி கொண்டிருக்கிறது விரைவில் அவை வைரமாக கூட மாறலாம் :)...