எல்லாமுமாக என்னுள் நிறைந்த என் ஆயா சரோஜம்மா
என் சரோஜம்மா
எல்லாமுமாக என்னுள்
நிறைந்த என் ஆயா
என்னை தனியே
விட்டு சென்றது ஏனோ ?
உன்னில் மட்டுமே நான்
பகிர்ந்த எண்ணங்கள்
அதிகம் அதே போல தான்
நீயும் ..
சொல்லிய வண்ணம்
நீ மண்ணாகி போனாய்
எங்களை தவிக்க விட்டது
போனதேன் ...
நீ இறப்பதற்கு சில
மணி நேரங்களுக்கு
முன்னால் கூட
உன்னுடன் பேசினேனே
அப்பொழுது கூட நான்
உணரவில்லை
நீ என்னிடம் மட்டுமே
கூறியதை ...
எங்களை காக்க
அண்ணியை கொடுத்து
விட்டு சென்று விட்டாய்
உன் மனம் விருப்பத்துடன் ...
உன் விருப்பங்களையும்
எதிர்பார்ப்புகளும் நானறிவேன்
உன் அன்பால் உருவான
நான் நிறைவேற்றுவேன்
நீ விரும்பியவண்ணம் ..
நீ மண்ணாகி போவதை
பார்த்து கொண்டு மட்டுமே
இருந்த இந்த பாவியின்
உயிர் எண்ணங்கள்
உன்னை சுற்றி கொண்டே
இருக்கும் என்பதை நீயே
அறிவாய் .
------------------------------------------------------------------------
எல்லாமுமாக என்னுள்
கலந்த என் சரோஜம்மா
நீ இல்லாத ஒரு நாள்
வருமென நான் எதிர்பார்க்கவில்லை ...
உறவுகளின் வலிமையை
இழப்புகளின் மூலம்
உறுதி செய்கிறது என்
பாட்டியின் மரணம்....
அனைவருக்கும் நாம் பாட்டி பேரன்
உறவாக இருந்தாலும் நீ மட்டுமே எனக்கு
எல்லாமுமானவள் என்பதை
உன்னை தவிர வேறு யார் அறிவார் இங்கு...
நான் உன் பேரனாக பிறந்து
உன் அன்பாலும் அக்கறையாலும்
வளர்த்து என்னை உன் உயிர்
கொண்டு உருவாக்கினாய் ...
நான் என் அம்மா அப்பாவிடம்
கூட அதிகம் பேசியதில்லை
உன்னிடம் மட்டுமே நான்
அனைத்தையும்
பேசுவேனே இப்பொழுது
என் செய்வேனோ ...
எவ்வளவு துன்பங்கள்
வந்தாலும் அனைத்தையும்
நீ தாங்கி கொண்டு
உன் வரவால் மட்டுமே
உண்டு வாழ்ந்தோம் ...
உன் சோகங்களும்
ஏக்கங்களும் என்னுடன்
பகிரும் பொழுது நான்
ஆறுதல் கூறுவேனே
உன் காலத்தில் இவை
அனைத்தையும்
மாற்றி விடு கூறினாய்
அதை பார்ப்பதற்கு நீ
இங்கு இல்லையோ .
நீ மறைந்து நாங்கள்
வாழும் நிலைக்கு
வந்து விட்டோம்
நீ எப்பொழுதும்
போல் என் அருகிலே
இருந்து விடு ...
தினமும் உன்னுடன்
பேசுவது போல் இனிமேலும்
பேசிவிடு உன் வழக்கங்கள்
எப்பொழுதும் போல் தொடர்கிறது
நீ என்னில் வாழ்கிறாய்
எங்களில் நிறைந்துள்ளாய்
என்னென்றும் ..
---------------------------------------------------------------------------------------
என் சரோஜம்மா
என் வாழ்வில் நீ எப்பொழுதும்
நிறைந்து உள்ளாய் என்
சரோஜம்மா
உன் ஏக்கங்களும் சோகங்களும்
நான் மகிழ்ச்சியாக நம்
குடும்பத்தை மாற்றுவேன்
உன் விருப்பம் போல்...
உணரப்படாத உன் பிரிவை
தந்து விட்டு எங்கும்
நிறைந்தாய் என் சரோஜம்மா ...
உன் தலைமுறையிலும்
உன் பிள்ளைகள் தலைமுறையிலும்
உன் பேர பிள்ளைகள்
தலைமுறையிலும் நாங்கள் எப்படி
எல்லாம் இருக்க வேண்டும்
என்று விரும்பினையோ
அப்படி எல்லாம் நாங்கள்
இருப்போம் சரோஜம்மா ....
நீ ஒரு வரலாறாகவே
வாழ்ந்தாய் நீ செய்த
நன்மைகள் எப்பொழுதும்
நம் குடும்பத்தின் விழுதுகளாக
நாங்கள் இருப்போம்
என் வாழ்வில் நீ எப்பொழுதும்
நிறைந்து உள்ளாய் என்
சரோஜம்மா
உன் ஏக்கங்களும் சோகங்களும்
நான் மகிழ்ச்சியாக நம்
குடும்பத்தை மாற்றுவேன்
உன் விருப்பம் போல்...
உணரப்படாத உன் பிரிவை
தந்து விட்டு எங்கும்
நிறைந்தாய் என் சரோஜம்மா ...
உன் தலைமுறையிலும்
உன் பிள்ளைகள் தலைமுறையிலும்
உன் பேர பிள்ளைகள்
தலைமுறையிலும் நாங்கள் எப்படி
எல்லாம் இருக்க வேண்டும்
என்று விரும்பினையோ
அப்படி எல்லாம் நாங்கள்
இருப்போம் சரோஜம்மா ....
நீ ஒரு வரலாறாகவே
வாழ்ந்தாய் நீ செய்த
நன்மைகள் எப்பொழுதும்
நம் குடும்பத்தின் விழுதுகளாக
நாங்கள் இருப்போம்
----------------------------------------------------------------------
என் சரோஜம்மா
நான் இருக்கும்
தனிமை நிலை
போக்க நிறந்தரமாக
என்னுள் இருக்க
வந்து விட்டாய் ..
எப்பொழுது ஊருக்கு
வந்தாலும் உன்
மடி மீது படுத்து
கொள்வனே இனி
எங்கு போவேன்
என் சரோஜம்மா ...
எனக்கு என்ன
தோன்றினாலும்
முதன் முதலில்
உன்னிடம் மட்டுமே
நான் கருத்து கேட்பேனே ...
நான் நேசித்த யாவையும்
உன்னுடனே உறங்குகிறது
உன் புரிதலில் இங்கு
யாவற்றையும் பெற்றோம் ..
என் முன்னேற்றத்தில்
பெரும் பங்கு உன்னுடையது
மட்டுமே ..
இனி நான்
பெறப்போகும் யாவையும்
உன்னுடையதே ...
இங்கு என்னுடையது
என்று எதுவும் இல்லை
சரோஜம்மா
உன் அன்பும் நினைவுகள் தவிர.
நான் இருக்கும்
தனிமை நிலை
போக்க நிறந்தரமாக
என்னுள் இருக்க
வந்து விட்டாய் ..
எப்பொழுது ஊருக்கு
வந்தாலும் உன்
மடி மீது படுத்து
கொள்வனே இனி
எங்கு போவேன்
என் சரோஜம்மா ...
எனக்கு என்ன
தோன்றினாலும்
முதன் முதலில்
உன்னிடம் மட்டுமே
நான் கருத்து கேட்பேனே ...
நான் நேசித்த யாவையும்
உன்னுடனே உறங்குகிறது
உன் புரிதலில் இங்கு
யாவற்றையும் பெற்றோம் ..
என் முன்னேற்றத்தில்
பெரும் பங்கு உன்னுடையது
மட்டுமே ..
இனி நான்
பெறப்போகும் யாவையும்
உன்னுடையதே ...
இங்கு என்னுடையது
என்று எதுவும் இல்லை
சரோஜம்மா
உன் அன்பும் நினைவுகள் தவிர.
---------------------------------------------------------------------------------
மரணங்கள் வாழ்வின்
அருகாமையில்
அமர்ந்து உள்ளது ..
எத்தகைய பயங்களுக்கும்
கவலைகளுக்கும் ஒன்றுமே
பதில் சொல்லாமல்
எந்நேரமும்
அமைதியாய்
வாழ்கிறது ...
அதன் இருப்புகளை
உணரும் தருணத்தில்
நான் இல்லாமல்
போவேன் அதன் அமைதியில் ...
அன்பானவர்களின் பிரிவுகள்
மரணத்தின் வாயிலாக
வரும் பொழுது
கண்ணிராலும்
வசவு சொல்லால்
உயிர்ப்பிக்கிறது
நிலையான அமைதியை ...
உலகில்
நாள்தோறும் நடக்கும்
சம்பவங்கள் என்
வீடு வரை வந்து விட்டதை
இன்னும் என்னால்
மீளமுடியாமல்
தவிக்கிறேன் ...
இயற்கையின்
வாழ்வுகள்
பிறப்பும் இறப்பும்
மட்டுமல்ல
எண்ணிலடங்காத
அர்த்தமுள்ள
நினைவுகளால்
நிரம்பி உள்ளது
என்னென்றும்
என் பாட்டியை
போல்
அருகாமையில்
அமர்ந்து உள்ளது ..
எத்தகைய பயங்களுக்கும்
கவலைகளுக்கும் ஒன்றுமே
பதில் சொல்லாமல்
எந்நேரமும்
அமைதியாய்
வாழ்கிறது ...
அதன் இருப்புகளை
உணரும் தருணத்தில்
நான் இல்லாமல்
போவேன் அதன் அமைதியில் ...
அன்பானவர்களின் பிரிவுகள்
மரணத்தின் வாயிலாக
வரும் பொழுது
கண்ணிராலும்
வசவு சொல்லால்
உயிர்ப்பிக்கிறது
நிலையான அமைதியை ...
உலகில்
நாள்தோறும் நடக்கும்
சம்பவங்கள் என்
வீடு வரை வந்து விட்டதை
இன்னும் என்னால்
மீளமுடியாமல்
தவிக்கிறேன் ...
இயற்கையின்
வாழ்வுகள்
பிறப்பும் இறப்பும்
மட்டுமல்ல
எண்ணிலடங்காத
அர்த்தமுள்ள
நினைவுகளால்
நிரம்பி உள்ளது
என்னென்றும்
என் பாட்டியை
போல்
-------------------------------------------------------------
உறவின் கணத்தலில்
இலகுவாகிறது உள்ளம்
போதாமல் நிகழ்கிறது
நினைவின் இருப்பு
நெருங்குகின்ற தவிப்பு
சொல்லாமலே செல்கிறது
கேட்பதற்கு இல்லாமையால்
பகிர்வதற்கு நிறைய இருக்கிறது
வீட்டின் ஒவ்வொன்றிலும்
நம் பேச்சுக்கள் கேட்பதற்கு
காத்திருக்கிறது .
யாவும் என் ஆயாவின்
தோன்றலின் இருப்பிடம்
இல்லாமலே பயணிக்கிறது
என் வாழ்வு .
இலகுவாகிறது உள்ளம்
போதாமல் நிகழ்கிறது
நினைவின் இருப்பு
நெருங்குகின்ற தவிப்பு
சொல்லாமலே செல்கிறது
கேட்பதற்கு இல்லாமையால்
பகிர்வதற்கு நிறைய இருக்கிறது
வீட்டின் ஒவ்வொன்றிலும்
நம் பேச்சுக்கள் கேட்பதற்கு
காத்திருக்கிறது .
யாவும் என் ஆயாவின்
தோன்றலின் இருப்பிடம்
இல்லாமலே பயணிக்கிறது
என் வாழ்வு .
--------------------------------------------------------------------- -தி.ராஜேஷ் .
Comments
Post a Comment