தோழியே

எப்பொழுது தோழியே
உன்னை நான் சந்திதேன்
முதன் முதலில் ...
நினைவில் சிந்திக்க முடியாத
காலங்களில் என்றேனும்
ஒரு கணம் உன்னை
கண்டேனோ ?
அதன் வினை
இன்றும் தொடர்கிறது
நம் நட்பில் ...
உன்னை காணமல்
ஒன்பது வருடங்கள்
ஆயினும் ...
மாறாமல் மறக்காமல்
உன் அன்பில் வாழும்
நம் நட்பு ......
என்றேனும் ஒரு நாள்
நாம் சந்தித்தால்..
விலகி சென்ற நிமிடங்கள்
மீண்டும் நம் அன்பில்
பூரணமாகும் நம் நட்பு ...
நான் பார்க்கும் கேட்கும்
நல்லவை அனைத்திலும்
நீயாகவே உருமாருகிறாய் ..
நம் அன்பும் நட்பும்
நம் மதங்கள் பிரிக்கவில்லை
மாறாக வளர்ந்தது
மனித நேயமாக ....
உன்னை நினைக்கும்
நினைவுகளே என்னை
இன்னும் வாழ சொல்கிறது
என் நட்பை தேடி ..



                                    -தி .ராஜேஷ்   

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு