தன் வெறுப்புகளின் முன்மொழிதல்

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3606


முதன் முதலாக என் கவிதை உயிரோசை இணைய இதழில் வெளியானது மிகவும் அளவற்ற மகிழ்வான தருணம் இவை .
உயிரோசை இணைய இதழுக்கு நன்றி ..


நான் பெரும் இகழ்ச்சிகளில்
வேதனையின் சிதறல்கள்
ஒளி இழந்து காட்சியளிக்கிறது .
வருத்தம் கொள்ளும் வாய்ப்புகள்
என்னைச் சுற்றி அதிகமாகவே சூழ்ந்துள்ளது ..

தடுமாற்றங்களின் வெளிப்பாடு
சலனமின்றிப் பரிணமிக்கிறது
பிரிவின் நேசங்களைத் தாங்கிக் கொண்டு ..

நிர்ப்பந்தங்கள் என்னில் நீடிக்கும்
வரையில் பின்பற்றப்படுபவை
தொடர்ந்து விடுகிறது
எத்தகைய நிலையிலும் ..

துளைத்து எடுக்கும்
தன் மோதலை எங்கும்
பரப்பிச் செல்கிறது
புலம்பலான சிந்தனைகள் ..

முதன் முதலாக நியாயப்படுத்திக்
கொண்டது பல நிலைகளுடைய
தன் விருப்பங்கள் .

 விடைபெறுகின்ற இறுக்கம்
மீண்டது நம் தயக்க நிலைகளில்
வெறுப்புகளைக் கடந்து
முன்மொழிகிறது பேச்சில் ..


                              -தி.ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு