அவமதிப்பு
நெறிகளை உள்ளடக்கிய
நோக்குதல் நெருங்குகிறது
கூக்குரலிடுவதன் முனைப்பில்
ஒலிகள் விழுங்கப்படுகிறது.
ஊடுருவல் அனைத்தும்
அறிந்துள்ளவை மட்டுமே
நியாயப்படுத்த முடியும் ..
வழிமொழிகின்ற தவிப்பை
நிகழ்வை கடந்தும்
அனுமானங்களின் மிச்சங்களாக
இன்னும் உளறுகிறது ..
அகழியில் விழுந்த
செயல்களை மீண்டெழும்
சாத்திய கூறுகளை
முன்னெடுக்கிறது
அவமதிப்பு ...
உள்ளத்தின் மவுனம் கொண்டு
புறக்கணிப்பின் நிலையை
கடந்து விடுகிறேன்
-தி .ராஜேஷ்
Comments
Post a Comment