பொருள் சேர்
பொருள் சேர்க்கும்
கூட்டத்தில்
ஓய்ந்திருப்பது
இழிவின் செயலாகவே
பார்க்கப்படுகிறது .
தவறுகளின் மொத்த
உருவகமும்
இதன் மீதே
சேர்க்கப்படுகிறது .
மனதின் வாழ்வை
கேலிக்குரியதாக
மாற்றுகிறது
பொருள் சேர்
உலகம் .
பொருளின் இருப்பை
பதிவு செய்வது
உயிரினத்தின்
மதிப்பை கூட்டுவது
வெறும் கானல் நீர்
மட்டுமே .
அதற்கான அவசியமும்
திணிக்கப்பட்ட
நிர்பந்தமும் இன்னும்
என்னை அண்டாமல்
இருப்பதே
எந்தன்
இயக்கமாகிறது.
நிறைவை தருகின்ற
அந்த நிமிடங்களை
என் படிமத்தின்
நிற மாற்றங்களை
இறுதி வரை
மற்றவர்கள் உணராமல்
இருப்பதே
எனக்கான
முக்கியத்துவத்தை
வலுவாக்குகிறது
.
-வளத்தூர் தி.ராஜேஷ் .
Comments
Post a Comment