பொருள் சேர்





பொருள் சேர்க்கும் 
கூட்டத்தில் 
ஓய்ந்திருப்பது 
இழிவின் செயலாகவே 
பார்க்கப்படுகிறது .

தவறுகளின் மொத்த 
உருவகமும் 
இதன் மீதே
சேர்க்கப்படுகிறது .

மனதின் வாழ்வை
கேலிக்குரியதாக 
மாற்றுகிறது 
பொருள் சேர் 
உலகம் .

பொருளின் இருப்பை 
பதிவு செய்வது 
உயிரினத்தின் 
மதிப்பை கூட்டுவது 
வெறும் கானல் நீர் 
மட்டுமே .

அதற்கான அவசியமும் 
திணிக்கப்பட்ட 
நிர்பந்தமும் இன்னும் 
என்னை அண்டாமல் 
இருப்பதே 
எந்தன் 
இயக்கமாகிறது. 


நிறைவை தருகின்ற 
அந்த நிமிடங்களை 
என் படிமத்தின் 
நிற மாற்றங்களை 
இறுதி வரை 
மற்றவர்கள் உணராமல்
இருப்பதே  
எனக்கான 
முக்கியத்துவத்தை 
வலுவாக்குகிறது 
 .

                         -வளத்தூர் தி.ராஜேஷ் .






Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு