காலம் ஆயுத்தமாகுகிறது.
வருமென நானிருந்தேன்
புன்னகையை ஏந்தி கொண்டு
அன்பின் கட்டாயம் செய்திட்டாய்
சாய்க்கும் விழி பார்வையை
எனக்கும் பரிந்துரைக்கிறாய் .
ஆவலின் தொகுப்பை
புதிய ஆக்கத்திற்கு
உட்படுத்தும் நியாயம்
சிறிதேனும் சேர்க்கப்படுகிறது .
பழைய சிந்தனையின்
வன்மம் அங்காங்கே
உருமாறாமல் இருக்க
அதன் இருப்பை
அழித்தொழிய
யாரென்றே அறியாத
உன் மூலமே
சாத்தியமாகும் .
எதற்கென்றே அறியாத
இது வரை தோன்றிதடா
எண்ணங்கள் வரையின்றி
நீள்வதின் உண்மையாக்கும்
வருகின்ற வழியின்
துணையாக அகத்தில்
மேலும் ஒளியேற்றப்படுகிறது .
பெற்றோரின் மகிழ்வும்
சகோதரர்களின் எதிர்பார்ப்பும்
ஆயா அண்ணியின்
வாழ்த்தும் ஆசியும்
நிலைக்குமென
நண்பர்களும் சுற்றத்தாரும்
நினைப்பதை பூர்த்தி செய்ய
மனதின் புதிய விதை
வேருன்ற அன்பின்
செயல்கள் இனிதே
தொடங்க காலம்
ஆயுத்தமாகுகிறது .
-தி .ராஜேஷ் .
Comments
Post a Comment