புறக்கணிப்பின் நிலைகளில்
அரவணைப்பில் காத்திருக்கும்
நேசங்களில் நொடிகளாய்
நீள்கிறது உன் பரிதவிப்புகள் .
காலம் முன்னெப்போதும்
இல்லாத நெருக்கத்தில்
உறைந்து போகிறது
நம் புரிதல் மவுனங்களில்.
நீடித்து இருக்கும் நம்
தன்மைகளை வெறும்
வார்தைக்குள்
அடங்கிவிடுவதில்லை
---------------------------------------------------------------
புறக்கணிப்பின்
நிலைகளில்
கடந்து போகும்
வலிகளை
சேகரிக்கிறேன்
அனுதினமும் ..
ஆறுதலின் மொழியாக
தனிமையின் துணை
தோல்கொடுக்கிறது
அனைத்தையும்
தாங்கி கொள்ள ..
ஏற்றுக்கொள்ளப்படுபவை
முன்னின்று பயணம்
செய்ய வழிவகை
செய்கிறது என் ஏளனங்கள்.
--------------------------------------------------------------------
மகிழ்வின் ஒவ்வொரு
தருணத்திலும்
புதிப்பிக்கப்படுகிறது
குழந்தை பருவங்கள் ..
எப்பொழுதும்
இழந்த காலங்களில்
மட்டுமே உணரபடுகின்றன
தொலைந்து போன
நேசங்களை ..
கணங்களின் கூடுதலில்
உயர்ப்புடன் நாடுகிறது
மகிழ்வின் இருப்பிடம்
நோக்கி .
-------------------------------------------------------------
நிலைக்கின்ற சலனங்களில்
சரிந்து வீழ்கிறது
என் மனதின் நோக்கங்கள் ..
கீழே வீழ்ந்து
கொண்டிருக்கும்
என் எண்ணங்களை
மறுமதிப்பீடு செய்கிறது
என் செயல்கள் ..
மனதின்
சுயப்பரிசோதனைகள்
வலுப்பெறுகிறது .
----------------------------------------------
-தி .ராஜேஷ் .
நேசங்களில் நொடிகளாய்
நீள்கிறது உன் பரிதவிப்புகள் .
காலம் முன்னெப்போதும்
இல்லாத நெருக்கத்தில்
உறைந்து போகிறது
நம் புரிதல் மவுனங்களில்.
நீடித்து இருக்கும் நம்
தன்மைகளை வெறும்
வார்தைக்குள்
அடங்கிவிடுவதில்லை
---------------------------------------------------------------
புறக்கணிப்பின்
நிலைகளில்
கடந்து போகும்
வலிகளை
சேகரிக்கிறேன்
அனுதினமும் ..
ஆறுதலின் மொழியாக
தனிமையின் துணை
தோல்கொடுக்கிறது
அனைத்தையும்
தாங்கி கொள்ள ..
ஏற்றுக்கொள்ளப்படுபவை
முன்னின்று பயணம்
செய்ய வழிவகை
செய்கிறது என் ஏளனங்கள்.
--------------------------------------------------------------------
மகிழ்வின் ஒவ்வொரு
தருணத்திலும்
புதிப்பிக்கப்படுகிறது
குழந்தை பருவங்கள் ..
எப்பொழுதும்
இழந்த காலங்களில்
மட்டுமே உணரபடுகின்றன
தொலைந்து போன
நேசங்களை ..
கணங்களின் கூடுதலில்
உயர்ப்புடன் நாடுகிறது
மகிழ்வின் இருப்பிடம்
நோக்கி .
-------------------------------------------------------------
நிலைக்கின்ற சலனங்களில்
சரிந்து வீழ்கிறது
என் மனதின் நோக்கங்கள் ..
கீழே வீழ்ந்து
கொண்டிருக்கும்
என் எண்ணங்களை
மறுமதிப்பீடு செய்கிறது
என் செயல்கள் ..
மனதின்
சுயப்பரிசோதனைகள்
வலுப்பெறுகிறது .
----------------------------------------------
-தி .ராஜேஷ் .
Comments
Post a Comment