என் ஆயா சரோஜாம்மா -3

எல்லாமுமான என் ஆயா சரோஜம்மாவின் நினைவுகளை வெறுமென நினைக்கப்படுவது என் அன்பின் தேவைகளை கருதி மட்டுமல்ல என் அப்பா அம்மாவிடம் கூட அதிகம் பேசியதில்லை நெருக்கமாக இருந்ததில்லை சிறு வயது முதற்கொண்டு அன்பை பகிர்தலில் முதன்மையானதாக என் 
ஆயாவை மட்டுமே நான் கருத முடியும்.இழப்பின் ஒவ்வொன்று மணி துளியும் இன்று உணருகிறேன் அன்பின் நினைவும் மட்டுமே என்னை ஆக்கிரமிக்கிறது என் உள்ளத்தில் எழும் அழுகுரலை அதிகரித்து கொண்டே இருக்கிறது யாரும் அதை பொருட்படுத்தவே இல்லை என் அப்பா அம்மா மற்றும் சகோதரர்கள் உறவினர்கள் ,நண்பர்கள் அனைவருமே ...மற்றவர்கள் முன்னால் நான் அப்படி இருப்பதால் என்னை பற்றிய பயம் அவர்களுக்கு அதிகரித்துள்ளது அதை தவிர்க்கவே என் தனிமையின் துணை கொண்டு ஆறுதல் அடைந்து கொள்ள முயற்சி செய்கிறேன் ..
என் ஆயாவிற்கு முதல் குழந்தை இறந்து விட்டது அதற்கு பிறகு ஒரு பெண் குழந்தை ,மூன்று ஆண் குழந்தை பிறந்தார்கள் .என் தந்தை மூன்றாவதாக பிறந்தார் ..பிள்ளைகள் அனைவரும் நன்றாக வளர்த்து படிக்கவைத்து உறவினர்களின் தேவைகளை உடனுக்குடன் செய்து வந்தார்.. இப்பொழுது நினைத்து பார்கையில் என் ஆயாவிற்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை இது எனக்கு மிகுந்த ஆச்சிரியம் அளிக்கிறது இன்று வரை . கோபம் வருகின்ற சந்தர்ப்பங்கள் பல இருந்து இருக்கின்றன ஆனாலும் பொறுமையாகவே இருப்பார் எத்தகைய சந்தர்பங்களிலும் ..
எனக்கும் ஆயாவிற்கும் முரண்பாடுகள் வந்தது உண்டு ஆனால் அவை சில நேரங்களிலே நீடிக்கும் .நான் அனைத்து விஷயங்களும் முதலில் தெரிவிப்பது ஆயாவிடமே அவரின் மறைவிற்கு பிறகும் இதையே தொடர்கிறேன் என் பிரபஞ்சம் ,தோல்விகள் ,காதல் ,நட்பு ,துரோகம் ,அன்பு ,பரிதவிப்பு ,ஆளுமை ,கடவுள் .ஜாதி ,பல பல விஷயங்கள் பகிர்வது உண்டு என் சிந்தனையில் என்னவெல்லாம் தோன்றுமோ அனைத்தும் என் ஆயாவிடம் முதலில் கூறிவிடுவேன் .இன்று சில நாளில் அவரின் நினைவு என்னுடனே பயணித்து கொண்டிருந்தாலும் என்னால் அவரின் மரணத்தை இன்று வரை ஏற்றுகொள்ளவே முடியவில்லை எவ்வளவு நிதர்சனம் உண்மைகள் எனக்கு தெரிந்தாலும் இவையே எனக்கு மிஞ்சுகின்றன 
ஆயா நீ இல்லாதது எனக்கு என்னவெல்லாமோ நடந்து கொண்டிருக்கிறது யாரும் கேட்பதற்கு கூட ஆள் இல்லை எனக்கு ..நம் வீட்டிலும் எங்கும்  முன்பு போல் என்னால் இருக்க இயலவில்லை உனக்கு மட்டுமே தெரிந்த என் ரகசியத்தை உன்னுடனே கொண்டு சென்று விட்டாய் ..
 சரோஜாம்மா அளவுக்கதிகமாகவே உன் பிரிவு நிலை என்னை தடுமாற வைக்கிறது ..அப்பா அம்மா கூட என் நிலை புரியவில்லை நீ இருந்து இருந்தால் இன்று பல இன்னல்கள் அனைத்தும் மறைந்து இருக்கும் .சில கடுமையான பயணத்தில் நான் இருக்கிறேன் உன் கனவினை நான் நிறைவேற்றுவேன் சரோஜாம்மா ..

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு