விழித்திருப்பவனின் இரவும் பகலும் .







விழித்திருப்பவனின் இரவில் 
கனவொன்று வந்து 
கொண்டே இருக்கிறது 
மீண்டும் மீண்டும் 
வந்து போகிறது 
அதே கனவொன்று 
ஒரே கனவொன்று .
மெல்ல மெல்ல அவனை 
உள்ளிழுக்கிறது 
கனவொன்று .
பல ஆசைகளை 
நிறைவேற்றி கொள்ளலாம் 
என நிபந்தனை விதிக்கிறது 
கனவொன்று .
பல ஆயிரம் வன்மங்களை 
சுய சார்பற்று விதைக்கவும் 
நிபந்தனை விதிக்கிறது 
கனவொன்று .
நீ நினைப்பதை அனைத்துமே 
உருவாக்கி கொள்ளலாம் எனவும் 
நிபந்தனை விதிக்கிறது 
கனவொன்று .
இறுதியில் இவைகள் அனைத்துமே 
கனவென்றே கொள்ளவும் என 
விழித்திருப்பவனின் இரவில் 

கனவொன்று வந்து 
கொண்டே இருக்கிறது 
மீண்டும் மீண்டும் 
வந்து போகிறது 
அதே கனவொன்று 
ஒரே கனவொன்று .


விழித்திருப்பவனின் பகலில் 
கனவொன்று வந்து 
கொண்டே இருக்கிறது 
மீண்டும் மீண்டும் 
வந்து போகிறது 
அதே கனவொன்று 
ஒரே கனவொன்று .
மெல்ல மெல்ல அவனை 
உள்ளிழுக்கிறது 
கனவொன்று .
பல ஆசைகளை 
நிறைவேற்றி கொள்ளலாம் 
என நிபந்தனை விதிக்கிறது 
கனவொன்று .
பல ஆயிரம் வன்மங்களை 
சுய சார்பற்று விதைக்கவும் 
நிபந்தனை விதிக்கிறது 
கனவொன்று .
நீ நினைப்பதை அனைத்துமே 
உருவாக்கி கொள்ளலாம் எனவும் 
நிபந்தனை விதிக்கிறது 
கனவொன்று .
இறுதியில் இவைகள் அனைத்துமே 
கனவென்றே கொள்ளவும் என 
விழித்திருப்பவனின் பகலில் 

கனவொன்று வந்து 
கொண்டே இருக்கிறது 
மீண்டும் மீண்டும் 
வந்து போகிறது 
அதே கனவொன்று 
ஒரே கனவொன்று .

விழித்திருப்பவனின் 
இரவிலும் பகலிலும் 
கனவொன்று 
இருக்கிறது 
அவ்வளவு தான் .
                    -வளத்தூர் தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி