போதுமானது .

இப்பொழுது தொடங்கிய இந்த நொடி உயிர்ப்புடன் இருப்பதற்கு அதன் இயக்கம் காரணமாவதற்கு முன்பாகவே நினைக்கப்படுதலில் முழுமை அடைந்து விட்டது . என் நொடிகள் அனைத்தும் காலத்தால் செய்யப்பட்டது அல்ல யாதுமற்ற வெறுமையின் வெற்றிடத்தில் சேகரித்த மிச்சங்கள் மட்டுமே . என் மன மகிழ்வு அனைத்தும் இறுக்கமான நிலையில் இருந்தே தொடங்குகிறது அதனதன் வாழ்வதனை அதனதன் நொடிகளாய் கழிக்கின்றது. என் அக மேற்பரப்பில் வழிகின்ற நீர்மம் திட நிலையை அடைவதற்கு பல யுகங்கள் காத்திருக்க அவசியமில்லை இந்த கனமேற்றும் தனிமை போதுமானது . தி .ராஜேஷ் .