உறுதியின் விதைப்பு.-திண்ணை
இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது கவிதை . http://puthu.thinnai.com/?p=3711 தன் உறுதின் மீது கலைந்திருக்கும் சிறு சிறு நம்பிக்கைகளை சேகரிக்கிறேன் . நாளையின் மீது அவை இன்னும் நிர்பந்திக்கவில்லை இன்றைய இப்பொழுதைய கடக்கும் நிமிடத்தில் தனக்கு உண்டான கட்டமைப்பை சரி பார்த்து கொள்கிறது . இயங்குதலில் கவலை கொள்வதில்லை அது என் பிரபஞ்சம் பார்த்து கொள்கிறது . என் இருப்பின் என்றைக்குமான அவசியம் தன் எண்ணத்தின் உறுதியில் திளைத்திருப்பது வெறும் கற்பனை கொண்ட கனவல்ல என்பதை நிருபணம் செய்வதே . பகடை செய்யப்பட்ட வாழ்வு அல்ல மற்றவர்கள் தீர்மானம் என் மீது நடைபெறுவதற்கு . உறுதி கொண்ட எண்ணங்களை வழிமறித்து உரமேற்றுகிறது தோன்றலின் விதைப்பு . என் விடியலின் பேரொளி அகத்தில் நெருங்குகிறது . ...